சோழநாடு என்னும் தமிழ்ப் பெருமிதமும் சமகாலச் சூழலும்
சோழநாடு என்னும் தமிழ்ப் பெருமிதமும் சமகாலச் சூழலும் சா. சாம் கிதியோன், உதவிப் பேராசிரியர், பிஷப் ஹீபர் கல்லூரி. நிலவில் இருந்து பூமியைப் பார்க்கும்போது பூமியின் பரப்பில் மனிதர்களால் கட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவர் மட்டுமே கண்ணில் தென்படுமாம் என்பதுபோல இமயத்திலிருந்து நோக்கினால் குமரிநில எல்லைக்குள் புலப்படும் ஒரே நிலம் சோழமண்டலம் என்றால் மிகையில்லை. மூவேந்தர் ஆட்சி செய்த தமிழிந்தியாவில் துலக்கமாகவும் விரிவாகவும் அந்தளவிற்கு இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்று ஏடுகளில் இடம் பிடித்த ஒரே நிலப்பரப்பு அல்லது ஒரே பேரரசு என்றால் அது சோழ நாடும் சோழப் பேரரசுமே ஆகும். இப்பெருமிதம் ஆளும் வர்க்க மனநிலையிலிருந்தும் வரலாற்று எழுதியலின் பெரும்போக்கு அடிப்படையிலிருந்தும் முகிழ்ப்பதாகும். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் வழங்கும் மண்ணை ஆண்ட மூவேந்தர்களுக்கும் நானில அமைப்புமுறை பொதுவாக இருப்பினும் ஒப்பீட்டு அளவில் சோழ நிலஅமைப்பின் தனித்தன்மை முக்கியமானது. குறிப்பாகப் பொன்னியாறு (காவிரி) பாயும் பெரும் வண்டல் சமவெளியும் வளமான நீண்ட கடல்வெளிப் பரப்பும். மருதநில நாகரிகத்தின் வர